பாலவாக்கம், ஊத்துக்கோட்டை அரசு பள்ளிகளில் மைதானத்தில் அமர்ந்து பயிலும் மாணவ - மாணவியர் வகுப்பறை: பற்றாக்குறையால் தொடரும் அவலம்
ஊத்துக்கோட்டை:வகுப்பறை பற்றாக்குறையால், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை அரசு பள்ளிகளில், மாணவ - மாணவியர் மைதானம், மரங்களின் நிழலில் அமர்ந்து பாடம் பயில வேண்டிய அவல நிலை உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டத்தில், 135 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், சில பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறையால், மரத்தடி நிழல், பள்ளி மைதானம் ஆகியவற்றில் அமர்ந்து, மாணவ - மாணவியர் பாடம் கற்க வேண்டிய நிலை உள்ளது.
பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள பாலவாக்கம், ஊத்துக்கோட்டை ஆகிய அரசு பள்ளிகளில், இதே நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

