கொசஸ்தலையில் புதிய மேம்பாலம் நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு
பள்ளிப்பட்டு, செப். 9-– கொசஸ்தலை ஆற்றில் இடிந்து கிடக்கும் தரைப்பாலத்திற்கு மாற்றாக, புதிய மேம்பாலம்
கொசஸ்தலை ஆற்றில் இடிந்து கிடக்கும் தரைப்பாலத்திற்கு மாற்றாக, புதிய மேம்பாலம் கட்டுவது குறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு பெருமாநல்லுார், மேலப்பூடி, சொரக்காய்பேட்டை, நெடியம் வழியாக பாய்ந்து சென்று, பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது.
இதில், சொரக்காய்பேட்டை, நெடியம் இடையே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம், கடந்த 10 ஆண்டுகளில், ஐந்து முறை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது.