274 ஊராட்சிகளில் 619 நிலுவை பணிகள் முடிக்க துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி!மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலத்திற்குள் நிறைவு செய்ய உத்தரவு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளில், 619 நிலுவை பணிகளை முடிக்க, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி போட்டு வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் வரும் அக்டோபர் மாதத்தில் முடிவதால், அதற்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு; காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றிய குழு; 274 ஊராட்சிகள் என, ஊரக உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளன.
இந்த உள்ளாட்சி நிர்வாகங்களில், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி தலைவர்களாகவும், கவுன்சிலர்களாவும் என, மக்கள் பிரதிநிதிகளாக பதவி வகித்து வருகின்றனர். இவர்களின் பதவிக்காலம், அக்டோபர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.


