மாறுகிறார்கள் மக்கள் !தனியார் கேபிள் டிவி இணைப்புக்கு ... அரசு செட் டாப் பாக்சில் வந்தது சிக்கல்
கோவை: அரசு கேபிள் டிவி சேவையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்னையால், அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் தனியார் கேபிள் இணைப்புக்கு மாறி வருகின்றனர்.
கோவையில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட அரசு கேபிள் டிவி இணைப்புகள் உள்ளன. பெரும்பாலான தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், அரசு கேபிள் டிவி இணைப்பை பெற்று நடத்தி வருகின்றனர்.
அரசு வழங்கி உள்ள செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதால் ஒளிபரப்பில் தெளிவில்லை என்றும், ஆக. 17 முதல் அரசு கேபிள் டிவி இணைப்பில் உள்ள செட்டாப் பாக்ஸ்களை ஆன் செய்யவும், ஆப் செய்யவும் முடியவில்லை என்றும், மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.

