எரியாத விளக்குகள்: இருட்டில் தடுமாறும் பொதுமக்கள்
சாய்ந்த மின்கம்பம் பாப்பநாயக்கன்புதூர், சாஸ்திரி வீதி 2-ல் மின்கம்பம் விழுந்து 3 ஆண்டு ஆகிறது. இன்னும்
பாப்பநாயக்கன்புதூர், சாஸ்திரி வீதி 2-ல் மின்கம்பம் விழுந்து 3 ஆண்டு ஆகிறது. இன்னும் புதிய கம்பம் அமைத்து தெரு விளக்கு பொருத்தவில்லை. உடனடியாக சீரமைக்க வேண்டும்.
காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில், குடிநீர் குழாய் பதிக்க ரோடு தோண்டி, ஒரு மாதத்திற்கு மேல் அப்படியே உள்ளது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர்.
மணியக்காரம்பாளையம் செந்தில் வெள்ளவன் நகரில் உள்ள தெரு விளக்கு 2 மாதமாக எரியவில்லை. இதனால் இருட்டில் பொதுமக்கள் விழுந்து எழுந்திருக்கும் நிலை உள்ளது.
