'ஊழலை ஒழிப்பது மிகச் சாதாரணம் இல்லை...'-முன்னாள் ஐஏஎஸ் சகாயம் பேட்டி
கோயம்புத்தூரில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு அமைப்பின் முக்கியக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்யின் ஊழல் ஒழிப்பு நிலைப்பாடு குறித்து கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அவர் பேசுகையில், "தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரே நேரடியாக முன்வந்து, 'நான் ஊழலை ஒழிப்பேன்; பொதுச் சொத்துக்களைத் தொடமாட்டேன், மற்றவர்களையும் தொட விடமாட்டேன்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது மிக மிக வலிமையான ஒரு சொற்றொடராகும். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரிடமிருந்து சட்டமன்றத்திலேயோ அல்லது அதற்கு வெளியிலேயோ இத்தகைய ஒரு பகிரங்கமான அறிவிப்பை நாம் கேட்பது என்பது மிகவும் வித்தியாசமான மற்றும் வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வாகும்.
இந்த அறிவிப்பானது தற்போதைய அரசு நிர்வாக அமைப்பில், குறிப்பாகப் பதிவுத் துறை மற்றும் வருவாய்த் துறை போன்ற பாமர மக்கள் நேரடியாக அணுகும் கீழ்மட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மத்தியில் ஒரு வகையான அச்சத்தை உருவாக்கியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அந்த வகையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை நாம் தாராளமாக வரவேற்கலாம். இருப்பினும், இந்த ஒரு அறிவிப்பாலேயே தமிழ்நாட்டில் ஊழல் முற்றிலும் ஒழிந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. எதிர்காலத்தில் இந்த அறிவிப்பைத் தற்போதைய தமிழக அரசு எந்த அளவிற்குச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்போகிறது என்பதை நாம் போகப் போகத்தான் பார்க்க வேண்டும். ஊழலை ஒழிப்பது மிகச் சாதாரணம் இல்லை.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
