இடைத்தேர்தல் செலவுக்கு பணம் தேவை; வீடியோ வெளியிட்டு நிதி திரட்டும் சீமான்
சென்னை: இடைத்தேர்தலில் செலவு செய்வதற்காக, நிதி வழங்குமாறு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோ பதிவு: தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளிலும், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தோல்விகளை நாங்கள் நிரந்தரமாக பார்ப்பதில்லை; தற்காலிக பின்னடைவாக மட்டுமே பார்க்கிறோம்.
எப்போதும் போல மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் கொண்டு, இம்முறையும் தனித்து களத்தில் போட்டியிடுகிறோம். எங்களிடம் படை மற்றும் கருத்து இருக்கிறது; களத்தில் நின்று உழைப்பதற்கான வலிமை இருக்கிறது. அனைத்தும் இருந்தும் எங்களிடம் உள்ள ஒரே பின்னடைவு பொருளாதார வலிமை தான்.






