தமிழகத்தைத் தாண்டும் பா.ம.க...
ஆந்திராவில் அன்புமணியின் திட்டம் என்ன?
2031-ல் தமிழ்நாட்டில் பா.ம.க-வின் ஆட்சிதான் என அடித்துச் சொல்லும் அன்புமணி ராமதாஸ், ஆந்திராவிலும் கட்சியைத் தொடங்க ஆயத்தமாகியிருக்கிறார். தமிழக - ஆந்திர எல்லை மாவட்டங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான வன்னியர் சமூக மக்களைக் கணக்கில்கொண்டு களமிறங்கியிருப்பதாகச் சொல்கிறது மாம்பழ வட்டாரம். ஆந்திராவில் கால் பதிக்கும் பா.ம.க-வுக்கு அரசியல் களம் எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டில் மாறியிருக்கும் அரசியல் சூழல்களால் ஆளுங்கட்சியாகும் கனவுகளோடு காய்களை நகர்த்திவருகிறது பா.ம.க. இது ஒருபுறமிருக்க, நம் பக்கத்து மாநிலமான ஆந்திராவில் கட்சியைக் கட்டமைக்க முன்னாள் எம்.பி டாக்டர் ஆர்.செந்தில், செஞ்சி எம்.எல்.ஏ அ.கணேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளை மாநில ஒருங்கிணைப்பாளர்களாக அறிவித்திருக்கிறார் அன்புமணி. மேலும், சித்தூர், திருப்பதி, விசாகப்பட்டினம் காக்கிநாடா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ஸ்ரீகாகுளம் எனப் பல்வேறு பகுதிகளுக்கு, 44 பொறுப்பாளர்களையும் நியமனம் செய்திருக்கிறார்.




