பொது தி.நகரில் ரூ.11 லட்சம் வழிப்பறி: 4 பேர் கைது
பாண்டிபஜார்: தி.நகரில் வங்கி ஊழியரிடம் 11 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 2.38 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
குன்றத்துார், பூபாலன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 33. இவர், எழும்பூரில் உள்ள ஐ.டி.எப்.சி., வங்கியில் பணிபுரிகிறார்.
மலேஷியாவில் உள்ள அவரது உறவினர் கூறியதன்படி, கடந்த 15ம் தேதி ஒருவரிடம் இருந்து, 11 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, பைக்கில் வீடு திரும்பினார்.



