புத்துணர்வு முகாம் நடத்தினால் யானைகள் ஊருக்குள் நுழையும் பாதுகாப்பான இடத்தில் நடத்த கோரிக்கை
கோவை: யானைகள் புத்துணர்வு முகாமிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், வனப்பகுதியை ஒட்டாத இடத்தில் முகாம் நடத்த வலியுறுத்தி உள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம், முதுமலை தெப்பக்காடு, மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி ஆகிய இடங்களில் 2003 முதல் நடத்தப்பட்டு வந்தது.
ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடந்த முகாம் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

