“எதுக்கும்மா கைகட்டி நிக்குறீங்க..?” - ஆசிரியரின் சாதிய மனநிலையால் பறிபோன மாணவியின் உயிர்!
வேற பள்ளிக்கூடத்துல சேர்க்கலாம்னு முடிவு பண்ணி, பழைய பள்ளிக்கூடத்துல டி.சி. கேட்டிருக்காங்க. அவங்க, `உடனே கொடுக்க முடியாது, இரண்டு வாரத்துல கொடுத்துடுறோம்’னு சொல்லி யிருக்காங்க.
மதுரை, உசிலம்பட்டியில், `யார் முன்னும் கைகட்டி நிற்கத் தேவையில்லை’ என சுயமரியாதையை கற்றுக்கொண்ட மாணவி, ஆசிரியரின் சாதிய மனநிலையால் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பள்ளி மாணவி ஒருவர் தலைமையாசிரியர் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த மாதம் 25-ம் தேதி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், பள்ளி மாணவி, தன் அம்மாவை கைகட்டக் கூடாது எனச் சொல்லியபோது, மாணவியை ஆசிரியர் கண்டித்ததால்தான் தற்கொலை செய்துகொண்டதாக, அவர் பெற்றோர் காவல்துறையில் புகார் தெரிவிக்க, பள்ளி தலைமையாசிரியர்மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.



