நகராட்சி மூன்று நுண் உரக்குடில்களில் தயாரிப்பு இயற்கை உரம்!: மாதம் தோறும் 120 டன் விவசாயிகளுக்கு வழங்கல்
உடுமலை: உடுமலை நகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகளிலிருந்து, மாதம் தோறும், 100 முதல், 120 டன் இயற்கை உரம் தயாரித்து, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளில், 17,526 வீடுகள், 3,068 வணிகம், தொழிற்சாலைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு, 28 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் கழிவுகளை உரமாக மாற்றும் வகையில், ராஜேந்திரா ரோடு, பொள்ளாச்சி ரோடு பகுதியில், மூன்று நுண் உரக்குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு தலா, 4 டன் அரவைத்திறன் கொண்ட இயந்திரம், 12 டன் கொள்ளளவு கொண்ட, ஆறு தொட்டிகள் அமைக்கப்படுகிறது.

