“மாத்தி போட்டுட்டோம் நண்பா… மன்னிச்சிடு!” - டி-ஷர்ட் நிறத்தால் கொலையான நபர்
ஆனந்த் ஏற்கெனவே ரௌடி பரத் கொலை வழக்கில் இருந்ததால், அவரின் ஆதரவாளர்கள்தான் தன்னைக் கொல்ல வந்திருக்கிறார்கள் என்று நினைத்து, தப்பித்து ஓடியிருக்கிறான். | murder case in puducherry
மதுக்கடையில் பீர் பாட்டிலால் தாக்கிய நபரைப் பழிதீர்க்கச் சென்ற போதைக் கும்பல், அடையாளம் தெரியாமல் வேறு ஒருவரை வெட்டிப் படுகொலைசெய்த சம்பவம், புதுச்சேரி மக்களைக் குலைநடுங்க வைத்திருக்கிறது!
தலையைக் குறிவைத்துச் சிதைத்த கும்பல்!
புதுச்சேரி கோவிந்தசாலைப் பகுதியைச் சேர்ந்த பிரபல ரௌடி பரத் என்பவர், 2023-ம் ஆண்டு வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். அந்த வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்ற கோவிந்தசாலை ஆனந்த், ஜாமீனில் வந்து மீண்டும் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி நள்ளிரவு சவாரியை முடித்து விட்டு வந்து வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தார் ஆனந்த். அப்போது திடீரென கத்தி, அரிவாள்களுடன் அங்கு வந்த கும்பல், ஆனந்தைச் சுற்றிவளைக்க முயன்றது. நமக்கு `ஸ்கெட்ச்’ போட்டுவிட்டார்கள் என்று உணர்ந்துகொண்ட ஆனந்த், ``காப்பாத்துங்க… காப்பாத்துங்க…’’ என்று அலறியவாறே அங்கிருந்து தப்பித்து ஓடினார்.


