மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது; சுப்ரீம்கோர்ட் திட்டவட்டம்
புதுடில்லி: ''மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது'' என சுப்ரீம்கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. கல்லூரி மாணவருக்கு நோட்டீஸ் அனுப்பிய கிரெட்டர் நொய்டா நிர்வாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க போவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
'நீட்' வினாத்தாள் கசிவு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, டில்லி ஜன்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் ஜூலை மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுதும் பரவிய இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாணவர்கள் மற்றும் குற்றப் பின்னணி இல்லாதோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டது. ஆனாலும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கவுதம புத்தா பல்கலைக்கழக மாணவரும், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினருமான அக்ஷத் திரிபாதி, டில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கிரெட்டர் நொய்டா நிர்வாகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

