போதை பொருள் கடத்திய மாணவி உட்பட 2 பேர் கைது
திருவனந்தபுரம்: டில்லியில் இருந்து தமிழகம், கேரள மாநிலங்களுக்கு எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் கடத்திய நர்சிங் மாணவி உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பந்தீரம்காவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மே மாதம் ஒரு கிலோ எம். டி. எம். ஏ. போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக முகமது பர்ஹான் என்பவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் டில்லியில் இருந்து எம்.டி.எம்.ஏ. சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது.

