விக்கிரவாண்டி --- சேத்தியாத்தோப்பு சாலை பணிகள் அடுத்தாண்டு நிறைவு ஐகோர்ட்டில் ஆணையம் தகவல்
சென்னை: 'சென்னை --- கும்பகோணம் நான்கு வழிச்சாலை திட்டத்தில், விக்கிரவாண்டி -- சேத்தியாத்தோப்பு இடையிலான பணிகள், 2027ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி, நெய்வேலி வழியாக கும்பகோணம் செல்லும் சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம், கடந்த 2017ம் ஆண்டு துவங்கப்பட்டது.
இன்னும் பணிகள் முடிவடையாததால், பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும் என, பா.ம.க., செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.





