சப்–கலெக்டர் அலுவலக த்தை புதுப்பிக்க திட்டம்! பாரம்பரியம் மாறாமல் புதுப்பொலிவு பெறும்
பொள்ளாச்சி: பாரம்பரிய கட்டடமான பொள்ளாச்சி சப் – கலெக்டர் அலுவலகத்தில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பழைய தாலுகா அலுவலகத்துக்கு, சப் – கலெக்டர் அலுவலகத்தை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
‘தென்னை நகரம்’ என்றழைக்கப்படும் பொள்ளாச்சி, ஆங்கிலயேர் காலத்தில், 1857ல் சப் – கலெக்டர் தலைமையில் இயங்கும் வருவாய் கோட்டமாக அறிவிக்கப்பட்டது. இக்கோட்டத்தில், திருப்பூர், உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தாலுகாக்கள் இருந்தன. கடந்த, 2008ல் புதியதாக உருவான திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை தாலுகா இணைக்கப்பட்டது.
பொள்ளாச்சி சப் – கலெக்டர் கட்டுப்பாட்டில் உள்ள பொள்ளாச்சி தாலுகாவில் இருந்து, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை தாலுகா பிரிக்கப்பட்டது.


