பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு
வானுார்: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சன்னதியில், புரட்டாசி மாதத்தையொட்டி சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நிர்வாக அறவங்காவலர் கோதண்டராமன் கூறியதாவது:
புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சுவாமி, புரட்டாசி மாதத்தை முன்னிட்டு வரும் 18ம் தேதி முதல் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
