காசி யாத்திரை! பயணமும்,புனிதமும்...
பிந்து மாதவர் கோவில் உத்தரப் பிரதேசத்தின் புனித நகரமான காசியில், பஞ்சகங்கா காட் அருகே அமைந்துள்ள மிகப் பழமையான வைணவத் திருத்தலமாகும். இது காசியிலுள்ள "பஞ்ச மாதவ" விஷ்ணு தலங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே காசி யாத்திரை செய்பவர்கள் பிந்து மாதவரை வழிபாடு செய்வது வழக்கம்.
புராணக் கதையின்படி, அக்னிபிந்து முனிவர் பஞ்சகங்கா காட் பகுதியில் கடுமையான தவம் செய்தார். அவரது பக்தியால் மகிழ்ந்த மகாவிஷ்ணு அங்கு நிரந்தரமாகத் தங்குவதாக அருள் வழங்கினார். அதனால் "அக்னிபிந்து'' என்ற பெயருடன் "மாதவ'' இணைந்து "பிந்து மாதவ்'' என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப் படுகிறது.
காசியில் இருந்த பழைய பிந்து மாதவ் கோவில் வட இந்தியாவின் மிகப் பிரம்மாண்டமான விஷ்ணு ஆலயங்களில் ஒன்றாக இருந்தது. முகலாய ஆட்சிக் காலத்தில் அந்தக் கோவில் இடிக்கப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பின்னர் பக்தர்களாலும் மராத்திய அரசர்களாலும் தற்போதைய கோவில் மறுபடி கட்டப்பட்டது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
