பொது கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் வலியுறுத்தல்
உத்திரமேரூர், செப். 7– அம்மையப்பநல்லுார் இருளர் குடியிருப்பு பகுதியில், அமைக்கப்பட்டுள்ள பொது
அம்மையப்பநல்லுார் இருளர் குடியிருப்பு பகுதியில், அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பறையை, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், அம்மையப்பநல்லூரில், இருளர் குடியிருப்பு அமைந்துள்ளது. அப்பகுதியில், 20க்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 2024 – 25ம் ஆண்டு, 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொது கழிப்பறை கட்டப்பட்டது.
இந்நிலையில், கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களாகியும், கழிப்பறைக்கு தண்ணீர் வசதி மற்றும் கதவு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள இருளர் மக்கள் இயற்கை உபாதை கழிக்க முள் புதர்களுக்குள் செல்லும் சூழல் உள்ளது.
எனவே, அம்மையப்பநல்லூர் இருளர் பகுதியில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
