62 லட்சம் பேல் பஞ்சு இறக்குமதி இருப்பினும் உயரும் நுால் விலை: முதல்வருக்கு டீமா அவசர கடிதம்
திருப்பூர்:பருத்தி இறக்குமதிக்கான வரிவிலக்கு அளித்த பின்னரும், செயற்கையாக நுால் விலை உயர்த்தப்படுவதாக, 'டீமா' சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
கோவை, திருப்பூர், ஈரோடு கரூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதியாகின்றன. நாடு முழுவதும் விற்பனைக்கான பின்னலாடைகளும் உற்பத்தியாகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 90 சதவீதம் இயங்குகின்றன. பல லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.



