காரைக்குடியில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா
திருவையாறு கண்ணதாசன் தமிழ் ஆய்வு இருக்கை - ஒளவை அறக்கட்டளை சாா்பில், கவியரசா் கண்ணதாசன் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற கவியரசா் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி, கவிஞா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊா்வலத்தை தொடங்கிவைத்த ஓய்வு பெற்ற நீதிபதி மெ. சொக்கலிங்கம், கோவிலூா் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமி கள்.
விழாவையொட்டி காலையில் கவிஞா்கள், தமிழாசிரியா்கள், பேராசிரியா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊா்வலத்தை கம்பன் மணிமண்டபத்திலிருந்து முன்னாள் நீதிபதி மெ. சொக்கலிங்கம், கோவிலூா் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.




