மக்கள் அழைப்பை ஏற்காத அதிகாரிகள் திருந்த வேண்டும்: அமைச்சர் அறிவுரை
சென்னை:''மக்களின் அழைப்புக்களை ஏற்காமல், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் உள்ளன. அதிகாரிகள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக சமீபத்தில், தலைமை செயலகத்தில், முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

