‘தாய்மைக்கு தயாராக இருக்கிறேன்’ - நடிகை சமந்தா
சென்னை,பேட்டியில் கலந்து கொண்ட சமந்தா, குழந்தை வரவிருக்கும் நிலையில் தாய்மையை வரவேற்கவும், தனது வாழ்க்கையின் முற்றிலும் புதிய கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கவு
பேட்டியில் கலந்து கொண்ட சமந்தா, குழந்தை வரவிருக்கும் நிலையில் தாய்மையை வரவேற்கவும், தனது வாழ்க்கையின் முற்றிலும் புதிய கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கவும் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த 2025-ம் ஆண்டு பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவை கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதாக சமந்தா அறிவித்துள்ளார். குழந்தை பிறக்கும் வரை சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாகவும், குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் திரையுலகில் இணைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



