தொழிலாளியை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
போடி அருகே தொழிலாளியை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் காந்திஜி குடியிருப்பைச் சோ்ந்தவா் மணி மகன் குமாா் (25). கூலித் தொழிலாளி. இவரது வீட்டருகே வசிக்கும் சரவணன் மகன் சத்தியபிரபு (24) மது போதையில் ஆபாசமாக பேசினாா். இதை குமாா் கண்டித்தாா்.
இந்த முன் விரோதத்தில் வெள்ளிக்கிழமை இரவு குமாா் நடந்து வரும்போது வழி மறித்த சத்தியபிரபு கம்பால் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தாா்.

