பேரூர் வட்டார கல்வி அலுவலருக்கு தேசிய விருது
கோவை: இந்திய அரசின் தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.இ.பி.ஏ.,) சார்பில், 2023–24, 2024–25ம் ஆண்டுகளில் கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா டில்லியில் நடந்தது.
நாடு முழுவதும் பள்ளிக் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் புதுமையான முயற்சிகளை செய்த 84 கல்வி அலுவலர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த குளோரி ஸ்டெல்லாவும் ஒருவர். இவர், பேரூர் வட்டாரக் கல்வி அலுவலராக வேலை பார்க்கிறார்.
