பன்றிக்கு வைத்த வெடி மிதித்த சிறுமி காயம்
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே பன்றிக்கு வைத்த வெடியை மிதித்த சிறுமி காயம் அடைந்தார்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் தாலுகா, ஜா.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் மகள் நிஷாந்தனா, 7; இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்துாரில் உள்ள துவக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதைக்காக நிஷாந்தனா அசகளத்துாரில் விளைநில பகுதிக்குச் சென்றார்.


