கேபியின் கலைப்பயணம் -19 புஷ்பா கந்தசுவாமி
என் அப்பா வெற்றிக்கு பின்னால் என் அம்மா!
"நல்ல மனைவி நல்ல குழந்தை நல்ல குடும்பம் தெய்வீகம்!'' அப்பாவுக்கு இறைவனின் கொடை! அப்பா கே.பி.யை பற்றி எழுதும் தொடரில் அவருடைய கலைப் பயணத்திற்கு உற்ற துணையாக இருந்த ஒரு ஆத்மாவை பற்றி எழுத வேண்டியது மிக அவசியம். அவர் வேறு யாருமல்ல, அப்பாவின் வெற்றிக்கு பின்னால் இருந்த பெண்மணி சீதா லட்சுமி என்கின்ற ராஜம்... எனது அம்மா.
ஒரு கலைஞனுக்கு இல்லற வாழ்வு அமைதியாகவும் திருப்தியாகவும் அமைந்தால்தான் கலைப் படைப்புகளை முனைப்புடனும், தீவிரத்துடனும் தொடர்ச்சியாக படைத்துக் கொண்டிருக்க முடியும். வீட்டில் எப்பொழுதும் பிரச்சனை என்றால் அந்த படைப்பாளி திணறித் திண்டாடிப் போய்விடுவார். பல பேருக்கு இதுபோன்ற சூழல் அமைந்துவிடுகிறது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
