‘அறிவியல் முறை கறிவேப்பிலை சாகுபடியில் அதிக வருமானத்துக்கு உத்தரவாதம்’
மேட்டுப்பாளையம்: அறிவியல் சாகுபடி முறையில், கறிவேப்பிலை விவசாயம் செய்தால், அதிக வருமானம் கிடைக்கும்,என, கோவை தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நம்பிக்கை அளித்துள்ளது.
சிறுமுகை அடுத்த இரும்பறையில், கோவை வேளாண் பல்கலை, கோழிக்கோடு அகில இந்திய ஒருங்கிணைந்த வாசனை பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் சார்பில்,
கறிவேப்பிலை விவசாயத்தில் அதிக வருமானம் பெறுவது குறித்து, பட்டியல் இன விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

