சிக்கண்ணா கல்லுாரி உருவான வரலாறு
தன்னாட்சி அங்கீகாரத்தை நோக்கி நகர்ந்து வரும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி, எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லுாரிகளுக்குப் பின்னால், திருப்பூர் மக்களின் பங்களிப்பும், சிலரின் தொலைநோக்குப் பார்வையும் இருக்கிறது.
இவை உருவான வரலாறு குறித்து, முன்னாள் திருப்பூர் எம்.எல்.ஏ., துரைசாமி கூறியதாவது:
1967ல் நான் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றபோது, அண்ணாதுரை தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போது புதிய அரசு கல்லுாரி அமைக்க, பொதுமக்கள் பங்களிப்பாக 5 லட்சம் ரூபாய் அரசுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.


