ரோட்டின் ஓரம் குப்பையை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ; பிளாஸ்டிக் கழிவுகளால் உடல் நலக்கேடு அதிகம்
ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் ரோட்டின் ஓரம் குப்பையை கொட்டி தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் உடல் நலக்கேடு ஏற்படுவதும் அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் நகரம், கிராமப் பகுதிகளில் சேகரமாகும் குப்பையை கொட்டுவதற்கு பலவித வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் போகிற போக்கில் ரோட்டின் ஓரம் குப்பையை வீசி செல்வது தொடர்கதையாக உள்ளது.
நள்ளிரவு நேரத்தில் வெளியிடங்களில் இருந்து வந்து குப்பைக்கழிவுகளை கொட்டி செல்வதும் தொடர்கிறது. தற்போது குப்பைக்கழிவுகளுடன் காய்கறி கழிவுகள், இறைச்சிக் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. சாப்பிட்ட இலைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிக அளவு கொட்டப்படுகிறது.


