நியூஸ் பாக்ஸ்!
மதுரை, தல்லாகுளம் காவல் நிலையத்தில் வினோத் என்பவர் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். சட்டம்-ஒழுங்கைப் பின்பற்றவேண்டிய இவரே சட்டத்தை மீறுவதாக சக காக்கிகள் புகார் எழுப்புகிறார்கள்
மக்கள் நலனா... நிதிச்சுமையா? - நுகர்வோர் நீதிமன்ற இடமாற்றத்துக்கு எதிர்ப்பு!
விழுப்புரம், கடலூரில் இயங்கிவரும் நுகர்வோர் நீதிமன்றங்களை, நிதிச்சுமை குறைப்பு, சொந்தக் கட்டடம் இல்லை என்ற காரணங்களைக் கூறி திருவண்ணாமலைக்கு மாற்றுவதற்கு முடிவெடுத்திருக்கிறது தமிழக அரசு. அப்படிச் செய்தால் வழக்குகளுக்காக மக்கள் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் செல்லவேண்டியிருக்கும் என்பதால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலப் பொருளாளர் வழக்கறிஞர் காளிதாஸிடம் பேசியபோது, ``தமிழகத்தில் தற்போது செயல்பட்டுவரும் 32 நுகர்வோர் நீதிமன்றங்களைப் பாதியாகக் குறைக்கும் முயற்சியைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. இது அப்பட்டமாக நுகர்வோர் உரிமைகளைப் பறிக்கும் செயல். சிதம்பரத்தில் பாதிக்கப்படும் ஒருவர் வழக்கு தொடுத்தால், அவருக்கு ரூ.10,000 இழப்பீடு கிடைக்கலாம். அதற்காக 150 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருவண்ணாமலைக்கு வருடக்கணக்கில் அவர் வந்து சென்றால், எவ்வளவு செலவு செலவாகும்... அரசும், சட்டங்களும் எப்போதும் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, அதில் லாப நஷ்டங்கள் பார்ப்பது சரியாக இருக்காது. அதனால் அரசு உடனே இந்த முயற்சியைக் கைவிட வேண்டும்” என்றார்.
மால் அனுமதிக்கு அழுத்தம்... த.வெ.க புள்ளிக்குச் சிக்கல்?






