ஓராண்டில் சேதமான தடுப்பு கம்பிகள் தரம் குறைவு என மக்கள் குற்றச்சாட்டு
திருவள்ளூர்: திருவள்ளூர் நான்கு சாலை சந்திப்பில், ரவுண்டானா அருகே அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் ஒரே ஆண்டில் சேதமடைந்துள்ளதால், தரம் குறைவாக அமைக்கப்பட்டதே காரணம் என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், ஆவடியில் இருந்து திருப்பதி, திருத்தணி, ஊத்துக்கோட்டை செல்லும் வாகனங்கள், ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக கலெக்டர் அலுவலகத்தை கடந்து செல்கின்றன. கலெக்டர் அலுவலகம் அருகே, நான்கு சாலை சந்திக்கும் இடம் உள்ளது.
இங்கு, வலதுபுறம் ஊத்துக்கோட்டை, இடதுபுறம் மருத்துவக் கல்லுாரி செல்லும் சாலை பிரிகிறது. நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும், சாலை குறுகலாக இருந்ததால், கனரக வாகனங்கள் திரும்புவதற்கு சிரமப்பட்டு வந்தன.




