அறுவடைக்கு பின்னும் மகசூல் கொடுக்கும் மைசூர் மல்லி ரக நெல் சாகுபடி
மைசூர் மல்லி ரக நெல் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.மணிவண்ணன் கூறியதாவது:
மணல் கலந்த களிமண் நிலத்தில், மைசூர் மல்லி பாரம்பரிய நெல் ரகத்தை, இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளேன். இது, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பாரம்பரிய ரக நெல். இந்த ரக நெல், 120 நாளில் மகசூலுக்கு வரும் சன்னரகமாகும்.
இந்த ரக நெல், சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களிலும் சாகுபடி செய்யலாம். அதற்கேற்ப நீர் பாசனம் வசதி இருக்க வேண்டும்.

