சட்டவிரோத இறால் பண்ணைகளால் திருவாரூரில் நீரியல் அமைப்பு பாதிப்பு ஐகோர்ட்டில் நிபுணர் குழு தகவல்
சென்னை: 'திருவாரூர் மாவட்டத்தி ல், தடை செய்யப்பட்ட பகுதிகளில் இயங்கும், சட்டவிரோத இறால் பண்ணைகளால், சுற்றுச்சூழல் மட்டுமின்றி, இயற்கை நீரியல் அமைப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகா, தில்லை விளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், சட்ட விரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி, தில்லை விளாகம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் யோகநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, நிபுணர் குழு அமைத்து, அப்பகுதிகளில் இறால் பண்ணைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய ஏதுவாக, வழக்கறிஞர் ஆணையராக யோகேஸ்வரனை நியமித்து உத்தரவிட்டார்.


