18 ஆண்டுகளுக்கும் குறைவாக பணியாற்றிய அரசு ஊழியா்களுக்கான இடைக்கால தொகை: தமிழக அரசு விளக்கம்
18 ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணியாற்றிய அரசு ஊழியா்களுக்கு இடைக்கால மாதாந்திர தொகை வழங்குவதில் புதிய விளக்கத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநருக்கு நிதித் துறைச் செயலா் (செலவினம்) வெங்கடேஷ் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 10 ஆண்டுகளுக்குமேல், ஆனால் 18 ஆண்டுகளுக்கு குறைவான தகுதியான பணிக் காலத்துடன் ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியா்களுக்கு, கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் என்ற அளவில் இடைக்கால மாதாந்திரத் தொகையை அனுமதிப்பது, அவா்களின் பணிக் காலத்தின் அடிப்படையில் அனுமதிக்கத்தக்க தொகையைவிட இடைக்காலத் தொகை அதிகமாக இருக்க வழிவகுக்கும் என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, இடைக்கால மாதாந்திரத் தொகையாக நிலையான தொகையான ரூ.10,000 மற்றும் அதனுடன் பொருந்தக்கூடிய அகவிலைப்படியும் அனுமதிக்கப்படும்.



