வீணாகும் காகிதம் - 5 அடி விநாயகர் வரை... அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் முயற்சி..!

புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவர்கள், பயன்படுத்திய சுமார் 30 கிலோ காகிதங்களைக் கொண்டு 5 அடி உயர விநாயகர் சிலையை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பயன்படுத்திய காகிதங்களைக் கொண்டு 5 அடி உயர விநாயகர் சிலையை உருவாக்கி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
ரசாயனப் பொருட்கள் எதுவும் பயன்படுத்தாமல் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமின்றி ஆரோக்கியமான உணவு மற்றும் விளையாட்டின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், பயன்படுத்திய காகிதங்களை கொண்டு பல்வேறு கலைப்பொருட்கள் மற்றும் சிற்பங்களை உருவாக்கி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாணவர்களுக்கு விநாயகர் சிலை உருவாக்கும் பயிற்சியை ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன் வழங்கினார்.
