நியூஸ்18 தோரணம் ஆயிரம் உணவுத் திருவிழா.. நெல்லையில் கோலாகல தொடக்கம்.!

நெல்லையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் நடைபெறும் தோரணம் ஆயிரம் நிகழ்ச்சியை பொது மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நெல்லையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் தோரணம் ஆயிரம் உணவுத் திருவிழா கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
நெல்லையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் நடைபெறும் தோரணம் ஆயிரம் நிகழ்ச்சியை பொது மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். நெல்லை வர்த்தக மையத்தில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் 3 நாட்கள் நடைபெறும் தோரணம் ஆயிரம் உணவுத்திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. விழாவை நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன், தொடங்கி வைத்த நிலையில், நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வன், நெல்லையின் சிறப்புகள் குறித்து புகழாரம் சூட்டினார். அதைத் தொடர்ந்து நடந்த கலை நிகச்சிகளில் கலைஞர்கள் தங்களது கலைத் திறனை வெளிப்படுத்தினர்.
18 உணவு அரங்குகள், 80க்கும் மேற்பட்ட பொருட்காட்சி அரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள் இடம்பெற்றுள்ள நிலையில், அனைத்தையும் மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர். கண்காட்சியில் நடைபெற்ற டிஜே இசையில் தங்களை மறந்து மக்கள் ஆட்டம் போட்டனர். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி நடத்தும் தோரணம் ஆயிரம் நிகழ்ச்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது.
