திருப்போரூர் –- இள்ளலூர் சந்திப்பு சாலை பணி மந்தம்: போராட்டம் நடத்த முடிவு
திருப்போரூர், செப். 8– திருப்போரூர் --– இள்ளலூர் சந்திப்பு சாலை சீரமைப்பு பணி மந்தகதியில் நடந்து வருவதால்,

திருப்போரூர் --– இள்ளலூர் சந்திப்பு சாலை சீரமைப்பு பணி மந்தகதியில் நடந்து வருவதால், வியாபாரிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், ஓ.எம்.ஆர்., சாலையில் திருப்போரூர் – இள்ளலூர் சந்திப்பு சாலை உள்ளது. இச்சாலை வழியாக காட்டூர், அம்மாபேட்டை, நெல்லிக்குப்பம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்கின்றனர். மேலும்,
இந்நிலையில், மேற்கண்ட சாலை அடிக்கடி சேதமடையும் நிலையில், நெடுஞ்சாலை துறையினர் தற்காலிகமாக ‘பேட்ச் ஒர்க்’ பணியை செய்தாலும் மீண்டும் சேதமடைந்தது.
அவ்வழியே அதிகளவில் டேங்கர் லாரிகள் தண்ணீர் சிந்தியபடி செல்வதால் அங்கு அடிக்கடி சாலை திருப்போரூர் – இள்ளலுார் சந்திப்பு வழியாக இள்ளலுார், வெண்பேடு, காயார் உள்ளிட்ட கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள் உள்ளன.
இந்த விவசாய கிணற்றிலிருந்து தினமும் 200க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.இதனால், சாலை அடிக்கடி தொடர்ந்து சேதமடைந்தது.
இதற்கு நிரந்தர தீர்வாக, மேற்கண்ட சந்திப்பு சாலையில் தரமான கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், கான்கிரீட் சாலை அமைக்க 14.31 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த மாதம் பணிகள் தொடங்கின. இப்பணிகள் தொடக்க நிலையிலேயே உள்ளன. ஒரு பகுதி முடிக்கப்பட்ட சாலையோரம் மண்குவியல் இருப்பதால் குறுகிய சாலை இடைவெளியில் ஏராளமான வாகனங்கள் சென்று, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கான்கிரீட் சாலைப்பணி மந்தகதியில் நடப்பதால், பொதுமக்கள் உட்பட வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, சாலை பணியை விரநை்து முடிக்க வேண்டும் அல்லது அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் வரை, ஒரு பகுதி பணி முடிக்கப்பட்ட சாலை ஓர மண் குவியலை அகற்றி தற்காலிகமாக பயன்பாட்டிற்கு விட வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேநிலை நீடித்தால் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:
திருப்போரூர் – ஓ.எம்.ஆர்., – இள்ளலூர் சந்திப்பு சாலையை சீரமைக்க கடந்த ஆக., முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. ஒரு பகுதி சாலை பணி முடிந்து 20 நாட்களுக்கு மேலாகிறது. வணிக வியாபாரிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அடுத்த கட்ட பணிகள் தொடங்குதல் அல்லது பயன்பாட்டிற்கு விடுதல் குறித்து அதிகாரிகள் மறந்து விட்டார்களா என்று தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நெடுஞ்சாலை துறைக்கு விரைந்து முடிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். வரும் நாட்களில் பண்டிகை தினங்கள் உள்ளன. மந்தகதியில் நடக்கும் பணியை விரை ந்து முடிக்காவிட்டால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போராட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.