சின்னசேலத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் வரும் 23–ல் நடக்கிறது
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் வரும் 23–ல் நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் பத்மஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 23ம் தேதி புதன்கிழமை காலை 9:30 மணிக்கு நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி, பகிர்மான கழகம், அரசு பொதுத்துறை நிறுவனங்கள், அரசு போக்குவரத்து துறை நிறுவனம், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 500க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.
என்.சி.வி.டி., மற்றும் நேரடியாக தொழிற் சாலைகளில் பிரஸர் அப்ரண்டிசாக சேர்ந்து 3 அல்லது 6 மாத கால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவி தொகை ரூ.9 ஆயிரத்து 600 முதல் 12 ஆயிரம் வரை நிறுவனத்தால் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி என்ற முகவரியிலும், 04146–294989 என்ற தொலைபேசி எண்ணிலும், மண்டல பயிற்சி இணை இயக்குனர், விழுப்புரம் 04146–250573 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.