மேம்பாலத்தில் மின் விளக்குகள் பழுது: 7 மாதத்தில் 50 விபத்துகள்
செங்கல்பட்டு, செப். 7– செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையின் ரயில்வே மேம்பாலத்தில், பழுதடைந்த மின்

செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையின் ரயில்வே மேம்பாலத்தில், பழுதடைந்த மின் விளக்குகள் ஏழு மாதங்களாக சீரமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர்.
செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையில், ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் வழியாக, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
ரயில்வே மேம்பாலத்தின் இரு பகுதியிலும், மின் விளக்குகள் அமைத்து மேலமையூர் ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.
இந்த மின் விளக்குகள் பராமரிப்பின்றி ஒளிராமல் பழுதடைந்து, ஏழு மாதங்களாக மேம்பாலம் இருளில் மூழ்கியுள்ளது.
இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதித்து வருவதோடு, அடிக்கடி விபத்துக்களும் நடந்து வருகிறது. மேம்பாலத்தில் 50க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்களில், 75க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தவிர, மேம்பாலத்தில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, பாலியல் ரீயதியான துன்புறுத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க கோரி, ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்