Religion
பாலசுப்பிரமணியர் கோவில் மகா கும்பாபிேஷகம்
புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் அடுத்த நயினார்குப்பம் வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
அதனையொட்டி, கடந்த 15ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், மாலை வாஸ்து பூஜை, பிரவேச பலி, முதற்கால யாக பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.
நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாக பூஜை, விஷேச சாந்தி, பூர்ணாஹூதி தீபாராதனையும், மாலை மூன்றாம் கால யாக பூஜை, திரவியாஹூதி, மந்த்ரோபசாரம், தீபாராதனை, சிலைகள் மற்றும் கோபுர கலசங்களுக்கு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது.
நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், திரவியாஹுதி, பூர்ணாஹூதி தீபாராதனையை தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 10:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.