Arts, culture, entertainment and media
காசில்லா மருத்துவம் வழங்கக்கோரி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:ஓய்வு பெற்றவர்களுக்கு, காசில்லா மருத்துவம் வழங்கக்கோரி, ஓய்வூதியர் சங்கத்தினர் நாமக்கல்லில்

பெற்றவர்களுக்கு, காசில்லா மருத்துவம் வழங்கக்கோரி, ஓய்வூதியர்
சங்கத்தினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில்
நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் குப்புசாமி ஆகியோர்
முன்னிலை வகித்தனர். அதில், ஓய்வூதியர்கள் ஏற்கும் வகையில் மருத்துவ
காப்பீடு திட்டம் வேண்டும். காசிலா மருத்துவம் வழங்க வேண்டும்.
சங்கங்களை புறக்கணிக்கக்கூடாது. ஓய்வூதியர் விருப்பமின்றி,
644 ரூபாய் கட்டாயமாக பிரீமியமாக பிடித்தம் செய்யக்கூடாது.
கருத்துக்களை மற்றும் விருப்பம் கேட்காமல் ஓய்வூதியத்தில் பிடித்தம்
செய்யக்கூடாது. வெளிப்படை தன்மையற்ற பேக்கேஜ் திட்டம் வேண்டாம்.
மருத்துவமனை தரம் வாரியான பட்டியல், தரம்வாரியான பேக்கேஜ் குறித்த
பட்டியல் வேண்டும். கடந்தகால சங்கங்களின் முறையீடுகளை, நீதிமன்ற
ஆலோசனைகளை புறந்தள்ளி அரசாணை என்ற பெயரில் ஓய்வூதியர்களின்
உயிரோடு விளையாடும் விபரீதத்தை கைவிடவேண்டும். பல்வேறு
குறைபாடுகளை கொண்ட அரசாணை, 123ஐ திரும்ப பெறவேண்டும் என்பன உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மாவட்ட
பொருளாளர் பெரியசாமி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
