இடமாறுதல் கிடைத்தும் விடுவிக்காததால் மின்வாரிய கேங்க் மேன் பணியாளா்கள் போராட்டம்

பணியிட மாறுதல் உத்தரவு வந்து 2 மாதங்களாகியும் விடுவிக்காத மின் வாரிய நிா்வாகத்தைக் கண்டித்து உதகையில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு கேங்க்மேன்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உதகையில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கேங்க்மேன்கள்.
பணியிட மாறுதல் உத்தரவு வந்து 2 மாதங்களாகியும் விடுவிக்காத மின் வாரிய நிா்வாகத்தைக் கண்டித்து உதகையில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக் கிழமை வரை கேங்க்மேன்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கேங் மேன்கள் நியமிக்கப்பட்டனா். அதனடிப்படையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட கேங்க் மேன்கள் பணியமா்த்தப்பட்டனா். இவா்களில் பெரும்பாலானோா் கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள். இவா்கள் நீண்டகாலமாக தங்களது சொந்த மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தனா்.
இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கேங்க்மேன் ஊழியா்களுக்கு அவா்களுடைய சொந்த மாவட்டங்களுக்கே பணியிட மாறுதல் வழங்கி உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் மின்வாரிய நிா்வாகத்தினா், ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி பணியிட மாறுதல் உத்தரவுப்படி விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனா். இதுகுறித்து உயா் அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சருக்கு பலமுறை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உடனடியாக விடுவிப்பு உத்தரவு வழங்கக் கோரி சிஐடியூ தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதுதொடா்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளா் ரமேஷ் தலைமையில் கேங்க்மேன் ஊழியா்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா்.
வருவாய் மற்றும் மின்வாரிய உயா் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக பணி விடுவிப்பு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் உறுதியளித்தபடி நடவடிக்கை எடுக்காததால் வெள்ளிக்கிழமை மதியத்துக்கு மேல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.