Economy, business and finance
த.வெ.க., ஆட்சியில் பணம் கொடுக்காமல் வேலை நடக்கிறது: அமைச்சர் பெருமிதம்
கரூர்:த.வெ.க., ஆட்சி வந்த பின், 100 நாட்களில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. பணம் கொடுக்காமல் அரசு
ஆட்சி வந்த பின், 100 நாட்களில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. பணம்
கொடுக்காமல் அரசு அலுவலகங்களில் வேலை நடக்கிறது என்று மக்கள்
கூறுகின்றனர்,'' என, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
சம்பத்குமார் தெரிவித்தார்.
அரசு சமூக நீதி விடுதியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
சம்பத்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர்,
நிருபர்களிடம் கூறியதாவது: கரூர், வெங்ககல்பட்டி விடுதியில்,
சமையல் சுகாதாரமாக இல்லை என்று கடந்த வாரம் மாணவியர் புகார்
கூறியிருந்தனர். அந்த விடுதி சமையலர் இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளார். அனைத்து விடுதிகளிலும் சுகாதாரம் மற்றும்
மாணவ-, மாணவியருக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி
கொடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பள்ளி மாணவ,
மாணவியர் விடுதிக்கு உணவுக்கு, 1,400லிருந்து, 1,800 ரூபாய், கல்லுாரி
விடுதிகளுக்கு, 1,500லிருந்து, 2,000- ரூபாயாக நிதி உயர்த்தி
வழங்கப்பட்டுள்ளது.
குறைவான எண்ணிக்கையில் தங்கி உள்ளனர். அதை கல்லுாரி விடுதியாக தரம்
உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. த.வெ.க., ஆட்சி வந்த
பின், சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் விரும்பி பார்க்கின்றனர். இந்த
ஆட்சி வந்த, 100 நாட்களில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. பணம்
கொடுக்காமல் அரசு அலுவலகங்களில் வேலை நடக்கிறது என, மக்கள்
கூறுகின்றனர். வரும் இடைத்தேர்தலில் த.வெ.க., 100 சதவீதம் வெற்றி
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.