Politics
“திமுக உட்பட யாரும் பாஜகவை எதிர்த்து பேசுவதில்லை” – மாணிக்கம் தாகூர்

பாஜகவை எதிர்த்து திமுக உட்பட யாரும் பேசுவதில்லை. மே 4-க்கு பிறகு அனைவரும் அமைதியாகிவிட்டனர் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர், “மத்திய பாஜக அரசை பற்றி பேசுவதற்கு, எதிர்க்கட்சி (திமுக) உட்பட அனைவரும் இங்கு திடீரென அமைதியாகிவிட்டார்கள். யாரும் மே 4-க்கு பிறகு பேசுவதில்லை. தமிழ்நாட்டிற்கு வஞ்சனை செய்வதை ஆளும் கட்சி உட்பட அனைவரும் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது அவர்களின் கடமை” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “மத்திய பாஜக அரசு, தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்பது சி.ஏ.ஜி. அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பாஜக தென் மாநிலங்களை பார்க்கிறது. மத்திய பாஜக அரசை பற்றி பேசுவதற்கு எதிர்க்கட்சி (திமுக) உட்பட அனைவரும் இங்கு திடீரென அமைதியாகிவிட்டார்கள். யாரும் மே 4-க்கு பிறகு பேசுவதில்லை. காங்கிரஸ் தொடர்ந்து இதனை பேசுவோம். தமிழ்நாட்டிற்கு வஞ்சனை செய்வதை ஆளும் கட்சி உட்பட அனைவரும் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது அவர்களின் கடமை.
மதச்சார்பற்ற தமிழ்நாட்டை தாக்குவதற்காகவும், உடைப்பதற்காகவும் பல வழிகளில் முயற்சித்து வருகிறது. மதச்சார்பின்மையை தொடர்ந்து காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. அதுவே இந்தக் கூட்டணியில் மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதி வைத்திருக்கிறோம். சமூகநீதியை பொறுத்தவரை ஜாதி வாரி கணக்கெடுப்பின் மூலம், தமிழ்நாட்டின் 96% இட ஒதுக்கீட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது. இதற்காக வரும் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு இயக்கம் நடத்துகிறோம். அதற்கு தி.க. தலைவர் வீரமணி வர இருக்கிறார்.
ஐ.யு.எம்.எல். என்றைக்கும் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டான தேசிய இயக்கம். இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். பாஜக ஆகியவை மற்ற மதத்தினரை இரண்டாம் தரக் குடிமக்கள் எனும் வன்மத்தோடு பார்ப்பார்கள். ஐ.யு.எம்.எல். வன்மத்தோடு மற்றொரு மதத்தை பார்த்தது கிடையாது” எனத் தெரிவித்தார்.
