Crime, law and justice
கேரளாவில் லாரி பின்னால், கார் மோதியதில் தமிழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
கேரள மாநிலம் திருச்சூர் கைப்பமங்கலம் பனம்பிக்குன்னு பகுதியில் லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில் திண்டுக்கல் PSNA கல்லூரியைச் சேர்ந்த 8 பொறியியல் மாணவர்கள் உயிரிழந்தனர். விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் பனம்பிக்குன்னு பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் கார் மோதியதில், காரில் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் உயிரிழந்தனர். கார் அதிவேகமாகச் சென்று விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மோதிய வேகத்தில் உருத்தெரியாமல் நசுங்கிய காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த மாணவர்களின் உடல்களைப் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். உயிரிழந்த மாணவர்கள் திண்டுக்கல் PSNA கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.