Lifestyle and human interest
கரூரிலிருந்து ஈசநத்தம் வரை கூடுதல் பஸ்கள் இயக்க மக்கள் வலியுறுத்தல்
அரவக்குறிச்சி:கரூரிலிருந்து ஈசநத்தம் வரை, கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இருந்து வெடிக்காரன்பட்டி, தாளப்பட்டி, நெஞ்சமாகூடலுார் வழியாக
ஈசநத்தம் செல்ல குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், தொழிலாளர்கள், விவசாயிகள்
பீக் ஹவர்ஸ் நேரங்களில் நீண்ட நேரம் நின்று, பஸ்களில் ஏற வேண்டிய
சூழ்நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு
செல்வதில் தாமதம்ஏற்படுகிறது.
உள்ள கிராம மக்கள் கரூருக்கு சென்று மருத்துவமனை, அரசு அலுவலகங்கள்,
சந்தை உள்ளிட்ட அவசியமான தேவைகளை நிறைவேற்ற பஸ்களையே அதிகம்
சார்ந்துள்ளனர். எனவே கரூரில் இருந்து வெடிக்காரன்பட்டி,
தாளப்பட்டி, நெஞ்சமாகூடலுார், ஈசநத்தம் வழித்தடத்தில்
பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, காலை மற்றும் மாலை நேரங்களில்
கூடுதல் பஸ்களை இயக்கவும், தற்போதுள்ள பஸ்களின் நேர அட்டவணையை
சீரமைக்கவும், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.