கோட்ட அளவில் வரும் 22ம் தேதி விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், வரும் 22ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், கோட்ட அளவில் செப்., மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது. ஆர்.டி.ஓ., தலைமை தாங்குகிறார். இதில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் கண்டாச்சிபுரம் தாலுகாக்களுக்குட்பட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.