Lifestyle and human interest
புதிய கல்குவாரிக்கு அனுமதி கூடாது கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே தொப்படிகுப்பம் கிரா-மத்தில், புதிய கல்குவாரி அமைக்க, நீர்வழிப்-பாதை மற்றும் பனை மரங்களை வெட்டி அழிப்ப-தாக, மக்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்-ளனர்.
இதுகுறித்து, த.வெ.க., பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில், தொப்-படிகுப்பம் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறி-யிருப்பதாவது: போச்சம்பள்ளி தாலுகா தொப்படிகுப்பம் கிரா-மத்தில், 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். எங்கள் பகுதியில் ஏற்கனவே, 4 கல்குவாரிகள் உள்ளன. இந்நிலையில், புதிதாக கல்குவாரி அமைக்க விண்ணப்பம் செய்து விட்டு, அனுமதி கிடைக்கும் முன்பே, பாறைகளை உடைத்துள்ளனர்.
மேலும், குவாரிக்கு செல்லும் வழிக்காக, மழைக்-காலங்களில் சக்கலிதுாரத்து மலையில் இருந்து, தண்ணீர் வரும் நீர்வழிப்பாதையை அடைத்தும், அங்கிருந்த பனை, தென்னை மரங்களை வேருடன் அகற்றி, கால்வாயில் வீசி மூடி உள்-ளனர்.
குவாரிகளால் மிகுந்த சிரமம் அடைந்து வரும் நிலையில், புதிதாக கல்குவாரி அமைக்க அனு-மதி வழங்கக்கூடாது. மேலும், புதிய கல்குவாரி அமைக்க நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு, மரங்கள் வெட்டி அழித்தது குறித்து புகாரளித்தும், அலுவ-லர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புதிய கல்குவாரி மற்றும் கல் உடைக்கும் இயந்திர பணிகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.